சனி, 2 ஜூன், 2012

பெரியார் திடல் வை.கலையரசன் நடித்த படம் உள்பட தமிழக மாணவர்களின் 4 குறும்படங்கள் கோவா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடல்


பெரியார் திடல் வை.கலையரசன் நடித்த படம் உள்பட தமிழக மாணவர்களின் 4 குறும்படங்கள்
கோவா பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடல்

கோவா, நவ.30-கோவாவில் கடந்த நவம்பர் 23-ஆம் தொடங்கி, 42-ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழா நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் புனே, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இயங்கிவரும் மூன்று முக்கிய திரைப்படக் கல்லூரி மாணவர் களின் படைப்புகள் திரையிடலுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டு (நவம் பர் 28) திரையிடப் பட்டன. சென்னையில் இயங்கிவரும் எம்.ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவ னத்தில் பயிலும் மாண வர்களின் நான்கு குறும் படங்கள் விழா நடை பெறும் மக்கினஸ் பேலஸ் அரங்கில் திரை யிடப்பட்டன. டி.சுரேஷ் குமார் இயக்கிய கருக்கு, கண்ணன் இயக்கிய அச்சுப்பிழை, சுவிக் குமாரின் இயக்கத்தில் முகாரி, பாக்கியராஜ் இயக்கிய பாட்டி நா ஆகிய நான்கு குறும் படங்கள் பெரும் வர வேற்பைப் பெற்றன. திரைப்படக்கல்லூரி பேராசிரியர் வி.எம். ரவிராஜ், மாணவர்கள் சுரேஷ்குமார், மோகன் ஆகியோர் திரையி டலின் போது நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக் கப்பட்டனர். இவற்றில் அச்சுப்பிழை என்ற படத்தில் கதாநாய கனாக வடசென்னை மாவட்ட தி.க இளை ஞரணி செயலாளர் வை.கலையரசன் நடித்தி ருந்தார்.
முன்னதாக திரை யிடலையொட்டி நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில், பன்னாட்டுத் திரைப்பட விழாவில் மாணவர்களின் படைப்புகளுக்கும் தனி இடம் அளித்தது மகிழ்ச் சிக்குரியது. மத்திய அரசின் செய்தி ஒளி பரப்புத் துறையின் கீழ் இயங்கும் கொல்கத்தா, புனே திரைப்படக் கல் லூரிகள் மட்டு மல்லா மல், முழுக்க முழுக்க தமிழக அரசால் மட்டு மே நடத்தப்படும் மிகவும் பழைமைவாய்ந்த எம்.ஜி.ஆர்.அரசு திரப் படக் கல்லூரிக்கும் இந்த சிறப்பு வழங்கப்பட்டி ருப்பது பெருமைக்குரிய தாகும். இதற்கென அமைக்கப்பட்ட குழு வின் பொறுப்பாளர் சென்னைக்கு வந்து, படங்களைப் பார்த்து தேர்வு செய்தார் என்று பேராசிரியர் வி.எம். ரவிராஜ் தெரிவித்தார். கடந்த 22-ஆம் தேதி முதல் 30-க்கும் மேற் பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று வருகிறார் கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் தமிழ கத்திலிருந்து நடிகை ரேவதி, தசாவதாரம் கலை இயக்குநர் பிர பாகரன் ஆகியோர் இயக்கிய குறும்படங் களும் திரையிடப் பட்டன. தமிழக மீனவர் பிரச்சினையையொட்டி லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் என்ற திரைப்படம் இந் தியன் பனோரமா பிரி வில் இடம்பெற்றுள்ளது.