ஞாயிறு, 14 நவம்பர், 2010

பெரியார் பட்டம்


1938 நவம்பர் இதே நாள் (14) தமிழ்நாட்டின் வரலாற்றில் வீரஞ் செறிந்த ஒப்பரும் நாள். இந்நாளில் தான் இந்தி எதிர்ப்புக் களத்தில் பெண்கள் முதன் முதலாகப் போர்க்கோலம் பூண்டு, மறியல் செய்து சிறைக்கோட்டம் சென்ற மயிர்க் கூச்செறியும் மகத்தான நாள்.
இதற்கு முதல் நாள் தான் (13.11.1938) சென்னை ஒற்றைவாடை அரங்கில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறை மலை அடிகளாரின் மகள்) மாநாட்டின் தலைவர். தோழியர் மீனாம்பாள் சிவராஜ் தமிழ்க்கொடி உயர்த் தினார். பண்டிதை நாரா யணி அம்மையார் மாநாட் டைத் திறந்து வைத்தார். தாமரைக்கண்ணி அம்மை யார் வரவேற்புரையாற்றினார். நாகம்மையார் படத்தினை தோழியர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார். டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றோர் கலந்து கொண் டனர்.

அம்மாநாட்டில் தான் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருந்த தலைவர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெரும் தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்து வருவதா லும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், ஒப் பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையானும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்க வேண்டும் என்று முதல் தீர்மானமாக நிறை வேற்றப்பட்டது. அம்மா நாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறச் செய்யத் தூண்டினார் என்று குற்றம் சாற்றப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் உரை கேட்டு மகளிர் போர்க் கோலம் பூண்டனர்.
நவம்பர் 14 (1938) இதே நாளில் சென்னை பெத்து நாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் அருகிலிருந்து, டாக்டர் தருமாம்பாள், இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத் தம்மையார், பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியார்), சீதம்மாள் ஆகியோர் இந்து தியாலாஜிகல் பள்ளி நோக்கி மறியலுக்குப் புறப் பட்டனர் - கைது செய்யப் பட்டனர். நீதிபதிகள் எவ் வளவோ கேட்டுக் கொண் டும் முன் வைத்த காலை பின் வைக்க மறுத்தனர் வீரத்தாய்மார்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மறியலில் ஈடுபட் டுக் கொண்டே இருந்தனர்.
1938 இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்ற வீரப் பெண்கள் 73 பேர்; அவர் களுடன் சென்ற குழந் தைகள் 32 பேர்.
தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் பெண்கள் போர்க் கோலம் பூண்டு சிறைக் கோட்டம் ஏகியது என்பது இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான்.
இந்நாளை எப்படிதான் மறக்க முடியும்!

வெள்ளி, 12 நவம்பர், 2010

வ.உ.சி.



தியாகம் என்பது, சுயநலத் துக்கான பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடு வதும், எவ்விதமான அவ மானங்களையும் லட்சியம் செய் யாமல், பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவதும் ஆகும் (விடுதலை 12.1.1966) - என்று தியாகம் என்பதற்குத் தெளிவான சூத்திரத்தைச் சொல் லியுள்ளார் தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார்.
இந்த இலக்கணச் சூத்தி ரத்தைப் பொருத்திப் பார்த்தால், அது இன்று பிறந்தாள் காணும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம் பரனாரையே சாரும்.
வெள்ளையனை எதிர்த்து, சுதேசிக் கப்பல் நடத்தி, இரட்டை ஆயுள் தண்டனை ஏற்றவர் - சிறையில் செக்கிழுத்தவர் - இவரைத் தவிர வேறு யாருக்கு உரியது. 1908இல் கோவை சிறைக்கு அவர் எப்படி இழுத்துச் செல்லப்பட்டார்? கை, கால் களைச் சங்கிலியால் பிணைந் திருந்தார்கள். என்ன கொடுமை யடா! சட்டம் படித்த சான் றாண்மை மிக்கத் தலைவருக்கு இந்தக் கதி!
அதே நேரத்தில் வெள்ளை யனே வெளியேறு எனும் ஆகஸ்ட் கிளர்ச்சி போராட்டத்தில் அண்டர்கிரவுண்ட் ஆகி, கட்சியை விட்டே வெளியேறிய சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) காந்தியாரின் சம்பந்தி ஆகி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆன நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
படிப்பில் என்ன குறைச்சலா! வழக்கறிஞர்; பல அரிய ஆய்வு நூல்களைத் தந்தவர், தலை சிறந்த மேடைப் பேச்சாளர் - எழுத்தாளர் - தியாகத்தின் சிகரம் - அத்தகையவரின் வாழ்வு வறுமைத் தீயில் பொசுங்கிப் போனதன் காரணமென்ன?
ஆச்சாரியார்; பிரா மணாள்; வ.உ.சி. - சூத்திரன் என்பதைத் தவிர இந்த இரு பேர்களுக்கும் உள்ள இடை வெளி என்ன?
ஆச்சாரியார், தாம் செய்த தியாகத்துக்காக (?) அவர் கோரியது என்ன தெரியுமா?

குங்குமம் (7.4.2000) இதழின் 67ஆம் பக்கத்தில் இதோ ஒரு செய்தி:
1973-74ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்து கோப்பு களைக் கண்ணுறும் வாய்ப் புள்ள ஒருவர் கூறியது: ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான், நெடுங்காலம் வாழப் போவ தாகவும், அக்காலம் முழுதும் தனக்கு வர வேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால், கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்திட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக் கையை அரசு நிராகரித்துவிட்டது. (குங்குமம் 7.4.2000 பக்கம் 67) அதே நேரத்தில் வ.உ.சி. அவர்கள், தன்மகனுக்கு ஒரு வேலை வாய்ப்பு வேண்டி தந்தை பெரியார் அவர்களின் பரிந்துரை கேட்டுக் கடிதம் எழுதிய நிலைதான்.
காங்கிரசுக்காக சகல தியாகங்களும் செய்த வ.உ.சி. இறுதிக் காலத்தில் காங்கிரசில் இல்லை; தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் திற்கு ஆதரவு காட்டினார்; சுயமரியாதை இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டார்.
மாவட்ட துணை ஆட்சி யராக இருந்த ஆஷ் துரைக்கு மிகவும் நெருக்கமானவர் ரங்கசாமி அய்யங்கார். அவருக்கு முகச் சவரம் செய்து கொண் டிருந்தார் ஒரு தொழிலாளி. அய்யங்கார் வ.உ.சி.யைப் பற்றி அவதூறாகப் பேச, அவ்வளவு தான் அந்தத் தோழர் பாதி சவரம் செய்த நிலையிலேயே அவரை அப்படியே விட்டுவிட்டு கோபாவேசத்தோடு வெளியேறி னார். அந்த அளவுக்குத் தொழி லாளர்கள் மத்தியில் மதிப்புப் பெற்றிருந்தவர் வ.உ.சி.,  உண்மையான தியாகத்தைப் போற்று வோமாக!